குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய சோதனை
தர்மபுரி
பெங்களூரிலிருந்து- கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த வதந்தியால்விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூரிலிருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, ரயில் ஓசூரில் நிறுத்தப்பட்டு விடிய விடிய சோதனைநடத்தப்பட்டது.
பெங்களூரிலிருந்து தினசரி கேரள மாநிலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில்இயக்கப்படுகிறது. வழக்கம் போல திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரிக்குகிளம்பியது.
ரயில் கிளம்பிய ஒரு மணி நேரம் கழித்து, பெங்களூர் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு ஒருதொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஐலண்ட் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் ஓசூர்-தர்மபுரி ரயில்நிலையங்களுக்கு இடையே குண்டு வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஐலண்ட் எக்ஸ்பிரஸ் சுமார் 10.30 மணியளவில் ஓசூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. போலீஸார்மோப்ப நாய்களுடன் பெட்டி, பெட்டியாக சோதனை நடத்தினர்.
பயணிகள் வைத்திருந்த சூட்கேஸ்கள், பைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தண்டவாளத்திலும் சோதனைநடத்தப்பட்டது.
அதிகாலை வரை நீடித்த இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.இதையடுத்து காலை 5 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications