மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியை கொன்று ரூ. 4 லட்சம் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டி என்ற இடத்தில் மின்சாரத்துறை அலுவலக இன்ஸ்பெக்டரைக் கொலைசெய்த கும்பல் அங்கிருந்த ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கொலை நடந்தது.
மின்வாரிய ஆய்வாளரான ராதாகிருஷ்ணன், வேலை அதிகம் இருந்ததால் அதை முடித்துவிட்டுஅலுவலகத்திலேயே உறங்கினார். அங்கு பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மின் கட்டணம் ரூ. 4 லட்சம்இருந்தது.
இதை அறிந்த கும்பல் இரவில் அலுவலகத்துக்குள் நுழைந்து அவரை கை, கால்களைக் கட்டிப் போட்டு பின்னர்வெட்டிக் கொலை செய்துள்ளது. இதன் பின்னர் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications