அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை:
இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உருவெடுக்கும் என்று அக் கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக உருவாகி நாளையுடன் 32 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ளகடித விவரம்:
தனது கட்சியின் தொண்டர்களிடம் எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத ஒரு நபர் (மணிசங்கர அய்யர்), தனதுகட்சித் தலைமையிடம் முக்கியத்துவம் பெறுவதற்காக ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
அதே போல நம் மீது பொறாமை கொண்ட ஒரு தீய சக்தி (திமுக தலைவர் கருணாநிதி), அந்த நபருடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறது.
இந்த நாடகங்கள், சதிகளை எல்லாம் அதிமுக வென்று காட்டும். மக்களுக்காக உழைப்பதே அதிமுகவின் ஒரேநோக்கம். அதிமுக உருவான நாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் மக்களுக்குக்காக நம்மை மீண்டும் ஒருமுறை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு உழைப்பதே நமது கடமை என்று அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
திராவிட பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு அதிமுக மட்டும் தான். 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இந்தக்கட்சியை உருவாக்கியபோது யாரும் அதை ஒரு கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறோம். எதிர்கால இந்திய அரசியல் வரலாற்றை நிர்ணயிக்கப் போவதும்நாம் தான் (அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என்று அதிமுகவினர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications