சீன விண்வெளி வீரர் பத்திரமாய் பூமி திரும்பினார்
பெய்ஜிங்:
நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்ட சீன விண்வெளி வீரர் யாங் லிவே (வயது 38) இன்று பத்திரமாக பூமிதிரும்பினார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாகத் திரும்பத் தரையிறக்கியதன் மூலம் சீனாவின் விண்வெளிஆய்வு முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது.
தனது லாங் மார்ச் ரக ராக்கெட் உதவியுடன் சென்ஸோவ் 5 (புனிதக் கலன் 5) என்ற விண்கலத்தில் வீரரை சீனாவிண்ணில் ஏவியது. 21 மணி நேரத்தில் பூமியை 14 முறை சுற்றிய பின்னர் இந்திய நேரப்படி இன்றுஅதிகாலை3.58 மணிக்கு யாங் லிவே பத்திரமாகத் தரையிறங்கினார்.
சென்ஸோவ் விண்கலம் பாராசூட்களின் உதவியுடன் வட சீனாவில் உள்ள மங்கோலியப் பகுதியில்தரையிறங்கியது.
கிட்டத்தட்ட 6,00,000 கிலோ மீட்டர் தூரம் விண்ணில் யாங் லிவே பயணித்துள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை (space station) அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications