சிதம்பரத்தில் யுரேனியம் பறிமுதல் !
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சிதம்பரத்தில் ஒரு கடைக்காரரின் வீட்டிலிருந்து அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம்கைப்பற்றப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். இங்குள்ள ஒரு கடைக்காரரின் வீட்டில் யுரேனியம்பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்றுசோதனை நடத்தி 5 கிலோ எடையுள்ள யுரேனியத்தை கைப்பற்றினர்.
கடைக்காரரிடம் விசாரணையும் நடத்தினர். தனக்கே தெரியாமல், தனது உறவினர் ஒருவர் இந்த பொருளைவைத்து விட்டுச் சென்றுள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து அந்த நபரை போலீஸார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
இந்த யுரேனியத்தில் கதிர் வீச்சு இருக்கிறதா என்பது குறித்து போலீஸாருக்கு உறுதியாகத் தெரியவில்லை.தற்போது இது கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications