அதிமுகவின் 32 ம் ஆண்டு விழா: ஜெ. தலைமையில் கொண்டாட்டம்
சென்னை:
அதிமுகவின் 32 ம் ஆண்டு விழா மாநிலம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலைமாலை அணிவித்தார். கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழாநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
மரணமடைந்த 14 அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கினார் முதல்வர்.
அதன்பின் நலிவுற்ற 6 பெண்களுக்கு தையல் மெஷின்களும், உடல் ஊனமுற்ற 3 பேருக்கு மூன்று சக்கரவண்டிகளும், சலவைத் தொழிலாளர்கள் 6 பேருக்கு சலவைப் பெட்டிகளும், காது கேளாதோர் 6 பேருக்குகாதொலிக் கருவிகளும், கண் பார்வையற்ற 3 பேருககு ஊன்றுகோல்கள் மற்றும் கருப்புக் கண்ணாடிகளும்வழங்கினார்.
இவ்விழா தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கிகொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications