அழகிரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான அழகிரி நீதிமன்ற நிபந்தனைப்படி பெங்களூரில்தங்கியுள்ளார். தினமும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந் நியிைல் தான் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும், நீதிமன்றத்தில்தினமும் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அழகிரிமனு தாக்கல் செய்தார்.
ஆனால், நிபந்தனையை தளர்த்தினால் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளை அழகிரி கலைத்துவிடுவார் என்று அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கற்பக விநாாயகம், அழகிரியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.