மதுரையில் பேய் மழை !
மதுரை:
மதுரை நகரில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வட கிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது. அதற்குக் கட்டியம் கூறும் வகையில், மாநிலம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கன மழைபெய்து வருகிறது.
மதுரை மாநகரில் நேற்று மாலை கன மழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த இந்த மழை சுமார் 3மணி நேரம் மதுரை மக்களை பயமுறுத்தி விட்டது. கன மழை காரணமாக மதுரை நகரின் பல பகுதிகள் நீர்ழ்மூழ்கின.
பெரியார் பேருந்து நிலையம், யானைக்கல், புதுமண்டபம் உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளும் நீரில்மூழ்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 10 மணி வரையிலும் பல்வேறு சாலைகளிலும்வாகனங்கள் நின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் கோவிலில் உள்ள பொற்றாமரைக்குளம் நிரம்பிவழிந்தது. இதுதவிர கோவிலுக்கு அருகில் உள்ள புது மண்டபத்திற்குள்ளும் மழை நீர் புகுந்து கடைகளை காலிசெய்து விட்டது.
கடைகளுக்குள் தண்ணீர் நிற்பதால் புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள், தையல் கடைகள் பெரும் நஷ்டத்தைசந்தித்துள்ளன.
மதுரை தவிர சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. காஞ்சிபுரத்திலும் மிக நல்லமழை பெய்துள்ளது.
பருவ மழை தொடங்கும்:
இந் நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிவிடும் என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காக தமிழகம் காத்துக் கிடக்கிறது. குறிப்பாக சென்னை நகர மக்கள் மழைக்காக தவமேஇருந்து வருகின்றனர்.
வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறிகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளது. வட கிழக்குப் பருவக் காற்றுதிசை மாறி ஆந்திரா பக்கம் வீசுவதால், மழை தொடங்குவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.
இருப்பினும் இன்னும் 3 நாட்களில் முழு அளவில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விடும் என்று கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 12 செமீ மழையும், பெரம்பூர், தர்மபுரி, குன்னூர் ஆகியஇடங்களில் தலா 3 செமீ மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications