ஊரக வளர்ச்சித் திட்ட அமலாக்கத்தில் தமிழகம் முதலிடம்!
சென்னை:
ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது, நிதியை கையாளுவது ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழகம்முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
2002-03ம் ஆண்டு ஊரக வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 626.43 கோடியில் ரூ. 581.30 கோடிஅளவுக்கு தமிழகம் செலவு செய்துள்ளது. அதாவது 92.79 சதவீத நிதியை ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்குபயன்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த இடம் ஹரியாணாவுக்குக் கிடைத்துள்ளது.அந்த மாநில அரசு தனக்குக் கொடுக்கப்பட்டநிதியில் 77.59 சதவீதத்தையும், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள மகாராஷ்டிரா அரசு 75.01 சதவீத நிதியையும்பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சம்பூர்ண கிராம் யோஜனா திட்டம், இந்திரா காந்தி வீட்டுவசதித் திட்டம், கிராம சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுகாதாரத் திட்டங்கள், பிரதமரின் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குஇந்த நிதியை தமிழக அரசு செலவிட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.