மழை சேமிப்பு குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நவாத்தி என்ற கிராமத்தில் மழை சேமிப்புக்காக அமைக்கப்பட்டிருந்தபெரிய பள்ளத்தில் விழுந்து மூழ்கி 2 மாணவர்கள் இறந்தனர்.
நவாத்தி கிராமத்த்ை சேர்ந்தவர்கள் ஹரீஷ் (9), மல்லேஸ்வரன் (8). இருவரும் நான்காம் வகுப்புப் படித்துவந்தனர்.
மழை நீர் சேமிப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையடுத்து இந்த கிராமத்திலும் சமீபத்தில் 10 அடிஆழம், 25 அடி நீளம், 10 அடி அகலத்தில் மிகப் பெரிய மழை நீர் வடிகால் குட்டை அமைக்கப்பட்டது.
இப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இந்தக் குட்டை நிரம்பி வழிந்தது. இந்த குட்டைக்கு அருகேமாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹரீசும் மல்லேஸ்வரனும் தவறி அதில் விழுந்து விட்டனர். இருவருமே மூச்சு முட்டி இறந்தனர்.
ஆனால், இது தெரியாத மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். இந் நிலையில்மாலையில் இரு உடல்களும் மிதக்கத் தொடங்கின.
இச் சம்பவம் குறித்து ஓசூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications