துபாயில் இந்திய பள்ளி மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய நாடுகள் எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவியர் இடையே ஜனாதிபதிஅப்துல் கலாம் இன்று கலந்துரையாடினார்.
அபுதாபியில் இருந்து இன்று காலை துபாய் வந்த கலாம், அங்குள்ள இந்திய உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றார்.அங்கு வளைகுடா நாடுகளின் பல்வேறு இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் குவிந்திருந்தனர்.
8 முதல் 17 வயது வரையிலான சுமார் 1,500 குழந்தைகளுடன் கலாம் கலந்துரையாடினார்.
கல்வியில் மிகுந்து ஆர்வம் செலுத்துமாறு அவர் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டார். உங்களது அறிவு, திறமை,கல்வியை இந்தியா வரும்போது அங்குள்ள சக இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications