For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

28 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை: கடலில் மூழ்கினரா?

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 28 மீனவர்கள் இன்னும் கரைக்கு வந்து சேராததால்,அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று 813 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர்அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது. அவர் ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 28 மீனவர்களைத் தவிர மற்ற அனைவரும் கரைக்குத் திரும்பி விட்டனர். 28 பேரையும் இலங்கைகடற்படையினர் பிடித்துச் சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும் இலங்கை கடற்படையிடமிருந்துஇதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்களில் கடலில் மூழ்கி விட்டார்களோ என்ற பயம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே எழுந்துள்ளதால்மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும், பீதியும் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X