ஜனனிக்காக ஆஜராகும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோருக்காக இரண்டு உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோருக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்குவதற்காககடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ரமீஜா வராததால் நகல் வழங்கப்படவில்லை. 20ம் தேதியான நேற்று 3 பேரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்றும் ரமீஜாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர்வரவில்லை. ஜனனியும் சதீஷும் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ஜனனி, ரமீஜா சார்பில் ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் மாதவன்நீதிபதி சம்பத்குமாரிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்திற்குகுற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடவோ அல்லது சிறைக் காவலை நீட்டிக்கவோஅதிகாரம் இல்லை.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதியால் மட்டுமேசிறைக் காவலுக்கும், நீட்டிப்புக்கும் உத்தரவிட முடியும் என்று கூறியிருந்தனர்.
அம்மனுவை நிராகரித்த நீதிபதி சம்பத்குமார், ஜனனி, அவரது தாயார் ரமீஜா, சதீஷ் ஆகியோரின் காவலைநவம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications