தமிழகம் முழுவதும் கனமழை: வட கிழக்குப் பருவ மழை தீவிரம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் வட கிழக்குப் பருவ மழை வலுத்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது.
மேலும், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் அடுத்த 2நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை 1 வார கால தாமதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. சென்னை,தஞ்சை, நாகை, மதுரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு, தெற்கு ஆந்திராவுக்கு இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம்தொடர்ந்து அதே இடத்திலேயே நிலை கொண்டிருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வட மாவட்டங்களில் நல்ல மழையும், தெற்கு மற்றும் உட்புற மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் இருக்கும்.சென்னையில் தொடர்ந்து மேகமூட்டமாக இருக்கிறது. இரவில் லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications