வழக்கம்போல பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி:

Alagar Samy taking oath (left), and gives his resignation letter(right)

பதவியேற்கும் அழகர்சாமி (இடது), அடுத்த நிமிடமே ராஜினாமா கடிதத்தை நீட்டுகிறார் (வலது)
பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்துக்கு மீண்டும் தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய தலைவராகபதவியேற்ற அழகர்சாமி, அடுத்த நிமிடமே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல்ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு கடந்த பல வருடங்களாக தேர்தலே நடத்த முடியாத நிலை உள்ளது.

இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினராந தேவர் இனத்தினர், தலித் பிரதிநிதியை தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த 9ம் தேதி பாப்பாபட்டியில் தேர்தல் நடந்தது. ஊர் மக்கள்சார்பில் நிறுத்தப்பட்ட அழகர்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற தலித் தொகுதிகளில் யாரும்போட்டியிடவே இல்லை.

பாப்பாபட்டியில் வெற்றி பெற்ற அழகர்சாமி நேற்று புதிய தலைவராகப் பதவியேற்றார். அவரதுபதவியேற்பையொட்டி ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஊராட்சிஅலுவலகத்தில் பதவியேற்ற அழகரிசாமி, அடுத்த நிமிடமே தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரிகளிடம்கொடுத்தார். ஆனால், செல்லம்பட்டி யூனியன் ஆணையர் ஜெகந்நாதன் அதை வாங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து வெளியே வந்த அழகர்சாமி, தபால் மூலம் அதை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். தனதுகடிதத்தில் மேல் ஜாதியினரின் பொறாமை காரணமாக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேல்ஜாதியினர் என்று அவர் தலித்களான பறையர் மற்றும் பள்ளர் ஜாதியினரைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடித விவரம்: நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னைவிட மேலா ஜாதியினரான பறையர்மற்றும் பள்ளர் இனத்தவர் இந்தத் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்கள்தோல்வியடைந்துவிட்டனர். இதனால் அவர்கள் என் மீது பொறாமையுடன் உள்ளனர். இதன் காரணமாக எனதுபதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தேவர் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் பதவி விலகியிருந்தாலும் கூட அதை வெளியில் சொன்னால்,அழகர்சாமியின் குடும்பம் அந்த ஊரில் வாழ முடியாது என்ற சூழல் உருவாகும் என்பதால் தலித் வகுப்பைச் சேர்ந்தமற்ற இனத்தினரின் பொறாமை காரணமாகவே பதவி விலகுவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால் பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி மீண்டும் காலியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+