மதவெறியை தூண்டும் பேச்சு: ராமகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் மீது விசாரணை நடத்தி, அவர் மதவெறியைத் தூண்டுமாறுபேசியிருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு கும்பகோணம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், கடந்த மார்ச் 30ம் தேதி கும்பகோணத்தில் ஒரு கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவமக்களிடையே மத குரோதத்தைத் தூண்டும் வகையில் ராமகோபாலன் பேசினார்.
மதங்களுக்கிடையே பிரச்சினையை உருவாக்கும் எண்ணத்திலும், மோதல்களைத் தூண்டும் நோக்கத்திலுமேஅவ்வாறு பேசினார் ராமகோபாலன்.
சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினர் குரோதம் கொள்ள வேண்டும் என்பதே அவரதுநோக்கமாக இருந்தது. எனவே ராமகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், ராமகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய கும்பகோணம் நகரடி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.