For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பா சாகுபடி தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தொடர் மழை பெய்து வருவதால் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கானபணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடங்கியுள்ளதால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது. காவி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் மழை விடாது பெய்கிறது.

இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் ஆராவாரம் காணப்படுகிறது. சம்பா நெல் சாகுபடிக்கான பணிகள்தீவிரமடைந்துள்ளன. உழுதல் மற்றும் நாற்று நடவு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இது தவிர மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு, கல்லணை வழியாக கடைமடைப் பகுதிகளுக்கும்காவிரி நீர் விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையே, கல்லணையிலிருந்து காரைக்கால் பகுதிக்குத் திறந்து விடப்படும் நீரின் அளவும்அதிகக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X