பாகிஸ்தானுடன் மீண்டும் கிரிக்கெட்: இந்தியா புதிய அமைதி முயற்சி
டெல்லி:
பாகிஸ்தானுடன் சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் தனது நட்புக் கரத்தை நீட்டியுள்ளது இந்தியா.
மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளைத் துவங்குவது உள்பட 12 அம்ச சமரசத்திட்டத்தை இந்தியா முன் மொழிந்துள்ளது.
பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மூத்த அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. அதன் பின்செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இதனைத் தெரிவித்தார்.அவரது பேட்டி விவரம்:
காஷ்மீர் விவகாரம் குறித்து துணைப் பிரதமர் அத்வானி ஹூரியத் மாநாடு அமைப்பின் பிரதிநிதியானஅன்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஸ்ரீநகருக்கும்,பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலுள்ள முஷாபராபாத்திற்கும் இடையே பஸ் போக்குவரத்தைஏற்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான விளையாட்டுத் தொடர்புகளை மீண்டும் தொடர்வதிலும்இந்தியா ஆர்வமாக உள்ளது.
மேலும் 20 பாகிஸ்தானிய சிறுவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரவும் இந்தியா தயார். இந்தியா- பாகிஸ்தான்அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் தயார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதை பரஸ்பரம் இரு நாடுகளும் தவிர்க்கவும், கடலோரப் பகுதிகளில் இரு நாட்டுக்கடலோரப் படையினரும் தகவல் பரிமாறிக் கொள்ளவும், மும்பை மற்றும் கராச்சி இடையே படகுப்போக்குவரத்தை தொடங்கவும் இந்தியா தயாராக உள்ளது.
அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர் தொடரும் என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications