சாலையோர தீபாவளி கடைகளுக்கு தடை: மதுரையில் பதற்றம்
மதுரை:
தீபாவளிக்கு முந்தைய தினமான இன்று இரவில் மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில்போடப்படும் சிறு கடைகளுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இது மதுரை மக்களிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி மதுரை நகரின் முக்கியப் பகுதிகளான விளக்குத்தூண், காமராஜர் சாலை,அம்மன் சன்னதி, கோரிப்பாளையம் போன்ற இடங்களில் சாலையோரங்களில் சிறு கடைகள் போடப்படுவதுவழக்கம்.தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் இந்தக் கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடக்கும். ஜட்டி, பனியனில்ஆரம்பித்து துண்டு, சாக்ஸ், குடை, கண்ணாடிப் பொருள்கள், பட்டாசுகள், வளையல், கைலி, சேலை வரைபலதரப்பட்ட பொருள்கள் குறைந்த விலையில் விற்கப்படும்.இரவு ஆக, ஆக விலை குறையும். இதனால் இரவு ஆக, ஆக கூட்டமும் பெருகும். ஜெகஜோதியாய் திருவிழாமாதிரி கூட்டம் கூடி பரபரப்பான விற்பனை நடக்கும்.மதுரை மக்கள் மட்டுமல்லாது சுற்றுப்பட்டைச் சேர்ந்த வெளியூர் மக்களும் வந்து பொருள்களை அள்ளிச் செல்வதுவழக்கம். மதுரையைப் பொறுத்தவரை இந்த பஜார், தீபாவளியின் மிக முக்கிய அங்கம்.கடைசி நேரத்தில் துணி வாங்குபவர்கள். குறைந்த விலையில் பொருள்கள் வாங்க வருபவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.மதுரை நகர வாலிபர்கள் இந்தப் பகுதிகளில் இரவு முழுவதும் சுற்றியலைவார்கள். அதிகாலையில் வீடு திரும்பிதீபாவளியைக் கொண்டாடுவார்கள்.ஆனால், இந்த ஆண்டு இதற்கு போலீஸார் தடை போட்டு விட்டார்கள். இதனால் மதுரை மக்கள் பெரும்அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். சிறு வியாபாகரிளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.போலீஸார் இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரி, வியாபாரிகள் தங்களது பொருட்களுடன்மதுரையில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications