தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க அரசு கடும் கட்டுப்பாடு
சென்னை:
தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
ஹைட்ரஜன் குண்டு, அணுகுண்டு போன்ற அதிக ஓசை எழுப்பும் வெடிகளை வெடித்தால் ஒலிக் கருவிகள் மூலம்டெசிபல் (ஒலியின் அளவு)அளக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒலி, மாசு இல்லாத தீபாவளி கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக வனம்மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது
அதிக ஓசை எழுப்பும் வெடிகளினால் தற்காலிக செவிட்டுத்தன்மையும், தீக்காயங்களும் ஏற்படுகின்றன. அரசின்நடவடிக்கையால் 2001ம் ஆண்டை விட 2002ம் ஆண்டு தீபாவளியின்போது 10-20 டெசிபல் வரை ஒலி மாசுகுறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு 125 டெசிபலுக்கு மேல் சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இந்த தீபாவளியை ஒலி மாசில்லாமலும், விபத்தில்லாமலும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பதைக் கண்காணிக்கவிழிப்புணர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஒலி மாசு குறித்து வாகனங்களில் சென்றுபிரசாரம் செய்து வருகின்றனர்.
இது தவிர ஒலி அளக்கும் கருவிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்போரைக் கண்டுபிடிக்கவும்நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர்களுக்கு ஒலி அளக்கும் கருவிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதிக ஒலி எழுப்பும் லட்சுமி வெடி, மயில் வெடி, நேதாஜி வெடி, ஹைட்ரஜன் குண்டு, அணு குண்டு, டைனமிக்வெடி, புல்லட் வெடி, கிளாசிக் குண்டு, கிருஷ்ணா வெடி, ஜம்போ வெடி, குதிரை வெடி, கிளி வெடி போன்றமரூன்ஸ் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள், தொடர் சரவெடிகள், 10 ஆயிரம் வாலா வெடிகளை வெடிப்பவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நல்ல முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு ஒரு ஜே!