10-வது படித்திருந்தால் பி.இ. சீட்!
சென்னை:
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தாலே பி.இ. படிப்பில் சேரலாம் எனஅதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமிகடிதம் எழுதி, அந்தக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த அந்தக் கல்லூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்துஇந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்தாவது படித்திருந்தால், பி.இ. படிப்பில் சேரலாம் என்று பத்திரிக்கை விளம்பரமு வெளியிட்டுள்ளது. மேலும்,வனவியல் மற்றும் கட்டடக் கலை ஆகிய படிப்புகளிலும் பத்தாவது படித்தவர்கள் சேரலாம் என்றும் அந்தக்கல்லூரியின் விளம்பரம் கூறுகிறது.
அந்தக் கல்லூரி, ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் மீது நடவடிக்கைஎடுக்க முடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
இதையடுத்து யு.ஜி.சிக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் அருண் நகவேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் உயர்ககல்வியை சீர் குலைக்கும் ராஜஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறுகோரியுள்ளார்.
ஈரோடு கல்லூரியின் மீது தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுளளார்.