For Quick Alerts
For Daily Alerts
Just In
கல் குவாரி நீரில் தவறி விழுந்து 3 குழந்தைகள், தாய் பலி
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கல் குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து 3குழந்தைகளும் தாயாரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் தீபாவளியையொட்டி திண்டிவனத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்குதனது 3 குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது தந்தை ராமசாமி நடத்தி வரும் கல் குவாரியைப் பார்க்ககுழந்தைகளுடன் திவ்யா சென்றார்.
அங்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், கல் குவாயில் தேங்கிக் கிடந்த மழை நீரில்குழந்தைகள் தவறி விழுந்தன.
இதைப் பார்த்துப் பதறிய திவ்யா அவர்களைக் காப்பாற்ற உள்ளே குதித்தார்.இதில் 4 பேரும் நீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, October 25, 2003, 5:30 [IST]