தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரிஸ்ஸாவை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.
இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இந் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தமண்டலம் உருவானது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் காற்றழுத்த மண்டலம் தற்போது ஒரிஸ்ஸாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் வடதமிழகத்திலும் கடலோரப் பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications