ஜெயலலிதா தஞ்சை பயணம்: கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க இன்று தஞ்சாவூர் வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடிகாட்டுவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து, ஹெலிகாப்டரில் தஞ்சைசெல்கிறார்.

அங்கு குந்தவை நாச்சியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் ஜெயலலிதா,அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தவறியதாகக் கூறி ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்டபல்வேறு விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று காலை தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தஞ்சை பனகல் கட்டடத்திலிருந்து கறுப்புக்கொடிகளுடன் பேரணியாக கிளம்ப முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார்அனைவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே தங்களது வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அதைத் தடுக்கபோலீசாரும் அதிமுகவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+