தபாலில் வரும் தலைக்காவிரி கோவில் தீர்த்தம்!
சென்னை:
கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் உள்ள கோவில் தீர்த்தத்தை தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கானஏற்படுகளைத் தபால்துறை மேற்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தலைக் காவிரியில்தான் காவிரி நதி உற்பத்தியாகிறது. அங்கு தொடங்கி தமிழகத்தின்நாகப்பட்டிணம் மாவட்டத்தில் வந்து முடிகிறது.
தலைக் காவிரியில் உள்ள காவிரித் தாயின் கோவிலின் தீர்த்த நீர் கிடைப்பதில் பெரும் சிரமம் இருப்பதாகவும்,தீர்த்தத்தை நேரில் பெற முடியாவிட்டாலும், தபால் மூலமாவது அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. தபால் துறையும்,கோவில் நிர்வாகமும் இதற்கான உடன்பாட்டைசெய்து கொண்டுள்ளன. அதன்படி தலைக்காவிரி தீர்த்தம் பெற விரும்புவோர், தலைவர், தலைக்காவிரி கோவில்,பாகமண்டலா என்ற முகவரிக்கு ரூ. 125 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பினால் அவர்களுக்கு 100 மில்லி அளவு கொண்ட காவிரி தீர்த்தம் பிளாஸ்டிக் பையில் அனுப்பிவைக்கப்படும். அத்தோடு கோவில் பிரசாதமான சர்க்கரை உருண்டைகள், உலர்ந்த திராட்சை, குங்குமம் மற்றும்தலைக்காவிரி புகைப்படம் ஆகியவையும் அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications