கபில் சிபல் வரவில்லை: ஜனனியின் ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள நடராஜனின் தோழி ஜனனி மற்றும் அவரது தாயார் ரெமீஜா ஆகியோரின் ஜாமீன்மனு மீதான விசாரணையை வரும் 6ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கஞ்சா கடத்தியதாக ஜனனி, ரெமீஜா,அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 4மாதமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுநிராகக்கப்பட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஜனனி மற்றும்ரெமீஜாவுக்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கடந்த வாரம் ஆஜராகி வாதாடினார்.
அதற்குப் பிறகு நீதிபதி கற்பக விநாயகம், ஜனனிக்கு ரூ. 1.4 கோடி வந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பிஅதற்கு இன்று பதில் அளிக்குமாறும், கபில் சிபல் நேரில் ஆஜராகி பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், கபில் சிபலால் ஆஜராக இயலவில்லை என்றும் எனவேவருகிற 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜனனியின் இன்னொரு வழக்கறிஞர்கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி கற்பக விநாயகம், வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு விசாரணையைஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications