For Daily Alerts
Just In
இலங்கை சிறையில் 6 தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி:
தூத்துக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சகாயராஜ், அந்தோணி, ஆல்பர்ட் உள்ளிட்ட 6 மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கடந்த 26ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். நான்கு நாட்களாகியும் அவர்கள் ஊர் திரும்பவில்லை.இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில்,6 பேரும் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த காரணத்தால், அந் நாட்டு கடற் படையினரால்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரேஸ்புரம்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறை வைக்கப்பட்ட மீனவர்களை மீட்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, November 1, 2003, 5:30 [IST]