நடுக்காட்டில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ்: பயணிகள் தவிப்பு
திருச்சி:
மதுரையிலிருந்து சென்னை கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில், அரியலூர் அருகே நடுக் காட்டில் கோளாறாகிநின்றது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் பயணிகள் பரிதவிக்க நேரிட்டது.
மதுரையிலிருந்து இன்று காலை 6.50 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. காலை 10 மணியளவில்,அயலூர் அருகே மருதையாற்று பாலத்தைத் தாண்டி ரயில் காட்டுப் பகுதியில் வந்தபோது திடீரென்று என்ஜினில்கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. மாற்று ரயில் என்ஜின் விருத்தாச்சலத்திலிருந்து கிளம்பியது. சுமார்இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு என்ஜின் வந்து சேர்ந்தது. இதையடுத்து புதிய என்ஜின் மாட்டப்பட்ட ரயில்இரண்டரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.
நடுக்காட்டில் ரயில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த, மக்கள் நடமாட்டம் இல்லாதகாட்டுப் பகுதியாக இருந்ததால் பெண்கள் பயத்துடன் அமர்ந்திருந்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிக்கடிஎன்ஜின் கோளாறு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.