தா.கிருட்டிணனுக்கு அஞ்சலி- சபாநாயருடன் பாமக-வினர் வாக்குவாதம்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னாள் திமுக அமைச்சர்தா.கிருட்டிணன் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலையல் 10 மணிக்கு அவை கூடியவுடன் தா.கி உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு நிதியமைச்சர் பொன்னையன் துணை நிதி நிலை அறிக்கையைசமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அதற்குப் பிறகு, கோவில்களில் ஆடு, கோழிகளைபலியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி அரசிடம் விளக்கம் கேட்டார்.
ஆனால் அப்போது நிதியமைச்சர் துணை நிதி நிலை அறிக்கை தொடர்பாக சில கேள்விகளுக்குப் பதில்அளிக்கவுள்ளதால், இப்போது கேள்வி கேட்க முடியாது. எனது அறைக்கு வந்து கேள்விகளைக் கேட்கலாம் என்றுசபாநாயகர் காளிமுத்து தெரிவித்தார்.
இதையடுத்து சபாநாயகருக்கும், பாமக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதிமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து சில கேள்விகளைக் கேட்க முயன்றார்.
அதற்கும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications