குடித்து விட்டு தகராறு: ரேஷன் கடை ஊழியருக்கு அடி, உதை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
| குடிபோதையில் பொருட்கள் வாங்க வந்த பெண்கள் உள்ளிட்டோரிடம் தகராறு செய்த ரேஷன் கடை ஊழியரைபொது மக்கள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
ஈரோடு அருகே பழைய பாளையத்திலுள்ள சிந்தாமணி நியாயவிலைக் கடையில், வேலை பார்த்து வருபவர்சதாசிவம். நேற்று இவர் குடிபோதையில் கடைக்கு வந்திருந்தார். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்களிடம் தகராறு செய்துள்ளார். தாறுமாறாக பேசவும்செய்துள்ளார். |
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி சதாசிவத்தை மீட்டு காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.













Click it and Unblock the Notifications