ஆற்காடு வீராசாமி வழக்கு: ஜெவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கைவிசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த முதல்வர்ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாகமுதல்வர் ஜெயலலிதாவை குற்றம் சாட்டி ஆற்காடு வீராசாமி பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து ஆற்காடு வீராசாமி மீது ஜெயலலிதா சார்பில், தமிழக அரசின் வழக்கறிஞர், சென்னை எழும்பூர்தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆற்காடு வீராசாமி மனுசெய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைஇன்று விசாரித்த நீதிபதிகள் சபர்வால், அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆற்காடு வீராசாமிமீதான வழக்கை விசாரிக்க சென்னை நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications