ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி: திருப்பதூரில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

காரைக்குடிக்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொட்டி காட்ட முயன்றமூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேயப் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள்ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் இன்று காலை மதுரையில் இருந்து காரில் காரைக்குடி கிளம்பினார். அவருடன் ஏராளமான கார்களில்திமுகவினரும் வந்தனர்.

ஆனால், ஸ்டாலின் காரைக்குடி வந்தால் தா.கிருட்டிணன் கொலைக்குக் கண்டனம் தெரிவித்து அவருக்குக் கருப்புக்கொடி காட்டப்படும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (வாண்டையார் பிரிவு) மற்றும் மனித நேயப் பேரவைஆகியவை அறிவித்திருந்தன.

இன்று காலை முதலே திருப்பத்தூரில், இந்த இரு அமைப்புகளின் தொண்டர்களும் காரைக்குடி செல்லும் சாலையின்இருமருங்கிலும் கருப்புக் கொடிகளுடன் குவிந்தனர்.

இதையடுத்து திமுக தொண்டர்களும் அங்கு ஏராளமான அளவில் குவிந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர்எச்சரித்துக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும்சூழல் உருவானது.

இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினரா.

ஆனால் யாரும் கலையாததால், அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு காரணமாக ஸ்டாலின்3 மணி நேரம் தாமதமாக காரைக்குடிக்கு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+