கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மறுடெண்டர் விட்டது ஏன்?: ஜெ. விளக்கம்
சென்னை:
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு விடுத்த டெண்டரை ஏற்று எந்த நிறுவனமும்சரிவர விண்ணப்பிக்கவில்லை. எனவே, அத் திட்டத்தை தமிழக அரசே நிறைவேற்றும் என முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விநாயகமூர்த்தி, கடல் நீரைக் குடி நீராக்கும்திட்டம் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு டெண்டர் விடப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்தத் திட்டம்இப்போது எந்த நிலையில் உள்ளது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த எனதுஅரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக உலகளாவிய டெண்டரும் விடப்பட்டது.
ஆனால், இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் விண்ணப்பித்தன. அவர்களுடைய மனுக்களும் நடைமுறைதவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து இரண்டாவது முறையாகவும் டெண்டர் விடப்பட்டது. ஆனால், 10 நிறுவனங்கள் மட்டுமே இதுவரைவிண்ணப்ங்களை வாங்கியுள்ளன. மேலும் கால அவகாசம் தருவதில் பயணில்லை என்று அரசு கருதுகிறது.
திட்டத்தை விரைவில் அமலாக்கி மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்பதே எங்கள்நோக்கம்.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. எனவே தான் குடிநீர்ப்பஞ்சம் நிலவுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications