கடத்தப்பட்ட குழந்தை 7 மணி நேரத்தில் மீட்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் கடத்தப்பட்டக் குழந்தையை 7 மணி நேரத்தில் மீட்டு புதுவைப் போலீஸார் சாதனைபடைத்துள்ளனர்.

பாண்டிச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது 3 வயது மகள் சரண்யா. இவள் படிக்கும்பள்ளிக்குச் சென்ற ஒரு மர்ம நபர் சரண்யாவைக் கடத்திச் சென்று விட்டார்.

இதுகுறித்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் சரண்யாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்துபோலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் ரேணுகாவின் வீட்டுக்குப் போன் வந்தது.அதில் பேசிய நபர், பணம் கொடுத்தால் குழந்தையை விடுவிப்பதாக கூறினான்.

ஏற்கனவே போலீஸார் ரேணுகாவின் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்து வந்ததால், அவரது வீட்டுக்குவந்த எண் எது என்பது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த தொலைபேசி எண் உள்ளஅயாங்குப்பம் பகுதிக்கு விரைந்தனர். அங்கு குழந்தையுடன் இருந்த சிலம்பரசன் என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்தான் குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது. சிலம்பரசனுக்கு வயது 20 கூட இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. இரவு 7.30 மணியளவில் குழந்தை பத்திரமாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+