3 பேரை வெட்டிக் கொலை செய்த 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேரை வெட்டிப் படுகொலை செய்தவழக்கில் 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது என்.கரிசல்குளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர்கடந்த 1990ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 21பேர், அதே ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி, ராஜாவின் உறவினர்களான கண்ணாயிரம், ராமலட்சுமி, லட்சுமிஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தனர். இதுதவிர மூக்கையா என்பவரையும் அக்கும்பல் சரமாரியாகவெட்டிப் படுகொலை செய்தது.

அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பாக மண்டலமாணிக்கம் போலீஸார் 21பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிந்ததும் நீதிபதி செல்வம் 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+