For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித உரிமை குழு அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை :

ஒரு குற்றவாளியைத் தேடுவதாகக் கூறி மதுரையில் உள்ள பிரபலமான பியூப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமைஅலுவலகத்தில் போலீஸார் இன்று ரெய்டு நடத்தினர்.

இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற மனித உரிமைக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.இதன் இயக்குனர் ஹென்ரி டிபேன் மிகப் பிரபலமான வழக்கறிஞராவார்.

இந்த அமைப்பின் அலுவலகத்தில் ஒரு குற்றவாளி தங்கியருப்பதாகக் கூறி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த30க்கும் மேற்பட்ட போலீஸார் இன்று ரெய்டு நடத்தினர்.

முன்னதாக போலீஸார் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆப்ரஹாம் லிங்கனிடம் இந்த சோதனைக்காகவாரண்டும் பெற்றனர். ஆனால், ரெய்டில் எதிர்பார்த்த குற்றவாளி சிக்கவில்லை என்று மாஜிஸ்ரேட்டிடம் பின்னர்போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களை அச்சுறுத்தவும், பழி தீர்க்கவுமே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக ஹென்றி டிபேன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருத்தங்கலில் எஸ்தர் மேரி என்பவர் அளித்த தவறான புகாரின் அடிப்படையில் மூன்று பேர் சட்டவிரோதமாகக்கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசார் மிருகத்தனமாகத் தாக்கியதாகவும், முறைகேடாககாவலில் வைத்து அடித்ததாகவும் புகார் வந்தது.

இதையடுத்து பியூப்பிள்ஸ் வாட்ச் இது தொடர்பாக விசாரணை நடத்தியது. பின்னர் பெண்களுக்கான தேசிய மனிதஉரிமைக் கமிஷன் இதை விசாரித்தது. அப்போது திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகளைமனித உரிமைக் கமிஷன் குடைந்து எடுத்தது.

இதனால் கோபமடைந்த காவல்துறை அதிகாரிகள் எங்களைப் பழிவாங்கும் நோக்கில் பொய்யானபுகாரின்பேரில் அலுவலகத்தை சோதனையிட்டனர் என்றார் டிபேன்.

மேலும் ரெய்ட் நடத்தியபோது, உங்க வேலையை மட்டும் பார்க்கனும், போலீஸ் விஷயத்தில் தலையிடக் கூடாதுஎனவும் சில அதிகாரிகள் இந்த அமைப்பினரை மிரட்டியதாகவும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X