பேனா முனை எந்த அதிகாரத்தையும் வெற்றி கொள்ளும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேனா முனை மிகவும் வலிமையானது. எந்த அதிகாரத்தையும், எத்தகைய ஆட்சியாளர்களையும் சந்தித்து வெற்றிபெறக் கூடியது என்பதை இந்த ஆட்சியார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் நேற்று மாலை ரம்ஜான் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியாளர்கள்துடியாகத் துடிக்கிறார்கள். எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது கை வைத்தால், பேனா வலிமை எத்தகையஅதிகாரத்தையும் சந்திக்கும் திறமை படைத்தது, வெற்றி பெறக் கூடியது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications