நாயுடு சிபாரிசை ஏற்று ஆந்திர சட்டமன்றம் கலைப்பு
ஹைதராபாத்:
ஆந்திர சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு முன் கூட்டியே தேர்தலை சந்திக்க தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர்சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இன்றேஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் நாயுடு ஒப்படைத்தார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு சட்டமன்றத்தைக்கலைத்தார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை ஆட்சியில் இருக்க பதவிக் காலம் இருந்தாலும், சமீபத்தில் நக்சல்களால்நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் தப்பியதால் கிடைத்துள்ள அனுதாப அலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நாயுடு முடிவு செய்துள்ளார்.
நேற்று தனது கட்சியின் பொலிட் பீரோவைக் கூட்டிய நாயுடு, சட்டமன்றத் தேர்தலை ஓராண்டுக்கு முன்பேநடத்திவிடும் முடிவைத் தெரிவித்தார். இதற்கு பொலிட் பீரோவில் முழு ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய நாயுடு, சட்டசபையைக் கலைக்கும் தீர்மானத்தைநிறைவேற்றினார்.
சாப்ட்வேர் வளர்ச்சி மற்றும் ஹைதராபாத்தின் வளர்ச்சியைத் தவிர வேறு அனைத்து விஷயங்களிலும் நாயுடுவின்அரசு முழுத் தோல்வி அடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தினந்தோறும் விவசாயிகள் தற்கொலை நடப்பதும் வழக்கமாகிவிட்டது. இந் நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலைச்சந்தித்தால் தோல்வி உறுதி என்பதை நாயுடு உணர்ந்துள்ளார்.
இதனால் இப்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அனுதாப அலையை வைத்து மீண்டும் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று கணக்கிட்டு, தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து இரு வாரங்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாயுடன் நாயுடு பேசினார். இதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் அத்வானி ஹைதராபாத் வந்து நாயுடுவுடன் இந்த விஷயம் குறித்து பேசிவிட்டுச் சென்றார்.
இந் நிலையில் தேர்தலைச் சந்திக்கத் தயாராகவே இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்றம்கலைக்கப்பட்டாலும் தேர்தல் வரை முதல்வர் பொறுப்பில் நாயுடு தொடர்வார்.












Click it and Unblock the Notifications