For Daily Alerts
Just In
காவிரி விவசாயிகளுக்கு பம்பு செட் வழங்க ஜெ. உத்தரவு
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உடனடியாக 1,250 பம்பு செட்டுகளை வழங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகியமாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 1.87 கோடி மதிப்பில் 1,250 பம்பு செட்டுகளை வழங்க முதல்வர்ஆணையிட்டுள்ளார். சுய உதவிக் குழுக்கள் மூலம் இவை விநியோகிக்கப்படும்.
இதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த விவசாயிகள் 50 பேருக்கு இலவசமாக பம்புசெட்டுகள்வழங்கப்படும். மற்றவர்களுக்கு 75 சதவீத மானியம் மற்றும் 25 சதவீத வங்கிக் கடனுதவியுடன் பம்பு செட்டுகள்வழங்கப்படும்.
மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஸ்கர் திட்டத்தின் மூலம் இந்த பம்பு செட்டுகள்வழங்கப்படவுள்ளன.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, November 16, 2003, 5:30 [IST]