For Daily Alerts
Just In
ஒரிசா: பஸ் பள்ளத்தில் விழுந்து 10 பேர் பலி
பலசோர்:
ஒரிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் ஜெயாநகர் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்தில் 10பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் அடங்கிய பஸ் ஒன்று பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மேற்குவங்காளத்தில் உள்ள மிட்நாபூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஜெயா நகர் என்ற இடத்தில் பள்ளத்தில்விழுந்தது.
இதில் 6 பெண்கள் உட்பட 10 பேர் பலியானர்கள். விபத்தில் காயமடைந்த 30 பேர் ஜலஸ்வேர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போக்ராய் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பஸ் மிக வேகமாக வந்ததால், வளைவில் திரும்பமுடியாமல் பள்ளத்தில் விழுந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, November 16, 2003, 5:30 [IST]