For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் ரூ. 1.25 கோடி ஹெராயின் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போதைப் பொருள்தடுப்புப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிலர் ஹெராயின் போதைப் பொருள் கடத்தலில்ஈடுபட்டிருப்பதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது ஹோட்டல் வாசலில் 3 பேர் சந்தேகத்திற்கிடமானவகையில் இருந்ததைப் பார்த்தனர். அவர்களை அணுகி விசாரணை நடத்தியபோது, அவர்கள்தான் ஹெராயின்விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

அவர்கள் தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தஹெராயின் பிடிபட்டது. பிடிபட்டவர்கள் சேவியர், தாமஸ், விஜயேந்திரன் என்று கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த இவர்களுக்கு உதவியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை போலீஸார்தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X