For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் நிலைய குண்டு வைப்பு: 3 பேருக்கு 18 ஆண்டு சிறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமெக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் இந்திய வருகையை எதிர்த்து கடலூர் துறைமுக சந்திப்பு ரயில்நிலையத்தில் குண்டு வைத்த 3 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2000மாவது ஆண்டு கிளிண்டன் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதை எதிர்த்து தமிழ்நாடு விடுதலைப்படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடலூர் ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இது தொடர்பாக 9 பேர்கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது. இதில் நடராஜன், கோவிந்தராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா 18 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அனைவரும் தங்களது தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார். இதனால் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் அதிகபட்சம் 5 ஆண்டு காலம்சிறையில் இருப்பார்கள்.

அதிலும் ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால், இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே அவர்கள்சிறைவாசம் அனுபவிக்கவுள்ளார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X