For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கிழக்கு பருவ மழை: குமரியில் குறைவு, நீலகிரியில் அதிகம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில்மிகவும் குறைந்த அளவிலும் இருந்ததாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் குறைந்து விட்டது. தற்போது ஆங்காங்கே மட்டும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட கிழக்குப் பருவ மழை பொழிவு குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்திலேயே அதிக அளவாக நீலகிரி மாவட்டத்தில்தான் 55 சதவீத மழைப் பொழிவு இருந்தது.அதற்கு அடுத்த இடத்தை நெல்லை (54 சதவீதம்) பிடித்துள்ளது.

மிகவும் குறைந்த அளவாக கன்னியாகுமரியில் 28 சதவீத மழைப் பொழிவே இருந்தது. சென்னையில் 44 சதவீதமழைப் பொழிவு இருந்தது. வட கிழக்குப் பருவ மழை மேலும் சில வாரங்களுக்கு இருக்கும் என்றும் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இப்போதுள்ள நீர் அடுத்த மாதம் வரை மட்டுமேவரும்.

எனவே வருகிற கோடைக்காலத்தில் சென்னை நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X