திமுகவின் பொடா எதிர்ப்பு போராட்டம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை:
பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிசம்பர் 1ம் தேதி திமுக சார்பில் நடக்கவிருந்த மறியல் போராட்டம்டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் டிசம்பர்1ம் தேதி திமுக சார்பில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு எதிரே மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் போராட்ட தேதி 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிசம்பர் முதல் இரண்டு வாரங்களுக்கு வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி தமிழகம் முழுவதிலும்நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ள திமுகவினர், வாக்காளர் பட்டியல் சீராகஅமையப் போதிய கண்காணிப்பு தேவை, எனவே போராட்ட தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் டிசம்பர் 1ம் தேதிக்குப் பதில் 15ம் தேதி நடைபெறும்என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications