அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திமுக உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் வருகிற 24ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர்செ.குப்புசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.2000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

56 பேருக்கு பதவி இறக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2 பெண் ஊழியர்கள் தற்கொலைக்குமுயற்சி செய்துள்ளனர்.

இவர்களுக்குக் கருணை காட்டி மனித நேயத்தோடு மீண்டும் பணியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரேதொமுச. சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.

இதேபோல, 24ம் தேதியன்று மாநிலம் முழுவதிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+