மூன்றாவது அணி: ஜெயலலிதா- பவார் ஆதரவாளர் நஜ்மா ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சோனியா அதிருப்தியாளரும், சரத்பவாரின் ஆதரவாளருமான ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லாஇன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து சரத்பவார் சார்பாக ஆலோசனை நடத்தவே அவர்ஜெயலலிதாவைச் சந்தித்ததாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியே செயல்பட்டு வரும் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் சரத் பவார் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்த தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தந்து வருகிறார்.

ஆனால், சோனியாவை பிரதமராக ஏற்க முடியாது என்று கூறி வரும் இவர் மூன்றாவது அணி அமைக்கும்முயற்சியில் உள்ளார்.

இந் நிலையில் அவரது ஆதரவாளரான நஜ்மா, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அவரை தனதுபோர்டிகோ வரை வந்து, கட்டித் தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார் ஜெயலலிதா.

சுமார் ஒரு மணி நேரம் இருவரும் தனியே பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த நஜ்மா, வெளியில்காத்திருந்த நிருபர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

தன்னை துணை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்ய மறுத்த சோனியா மீது கோபத்தில் இருக்கும் நஜ்மா,இப்போது சரத்பவாருடன் கை கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+