பசுபதி பாண்டியனை கொல்ல சதி: மனைவி புகார்
சென்னை:
திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட பசுபதி பாண்டியனை என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்யபோலீஸார் திட்டமிட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு மனித உரிமை ஆணையத்திடம், பசுபதிபாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் கடந்த மாதம் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வைத்துக்கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட பசுபதி பாண்டியன் மீதுஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந் நிலையில் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் சென்னையில் உள்ள மனித உரிமைஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தனது மனுவில், அரசியல் காரணங்களுக்காக எனது கணவர் மீதுபொய்யான வழக்குகளைப் போட்டுள்ளனர்.
வெங்கடேச பண்ணையார் விவகாரத்தில் எனது கணவர் பெயரையும் உள்நோக்கத்துடன் சேர்த்துள்ளனர்.குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை சந்தோஷப்படுத்துவதற்காக எனது கணவர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெங்கடேச பண்ணையாரைப் போல எனது கணவரையும் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே எனது கணவருக்கு ஆயுதப் பாதுகாப்பு வழங்க வேண்டும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்புவழங்க அரசுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications