புதிய தலைமை செயலகத்துக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் விசாரணை
சென்னை
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களைஇரண்டு வார காலத்திற்கு இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து பொதுப்பணித் துறையின்முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்ட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப் பிரகாசம்முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குப்புராஜ் தரப்பு வக்கீல் வாதாடுகையில், நகர அமைப்புப்பிரிவின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 44அறிவியல், தொழில்நுட்ப நிலையங்கள் பாதிக்கப்படும். எனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதியதலைமைச் செயலகம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்குப் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் கொடுக்குமாறு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல்என்.ஆர்.சந்திரன் கோரிக்கை விடுத்தார். பழைய கட்டடங்களை இரண்டு வார காலத்திற்கு இடிக்க மாட்டோம்என்று தமிழக அரசு சார்பில் உறுதியளித்தார். அதை ஏற்ற நீதிபதிகள் 2 வார காலத்திற்கு வழக்கு விசாரணையைஒத்திவைத்து உத்தரவிட்டனர்.