டிஸ்மிஸ்: தலைமைச் செயலரிடம் அரசு ஊழியர் சங்கம் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரி தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷிடம் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோநிர்வாகிகள் இன்று மனு கொடுத்தனர்.
ஜாக்டோ ஜியோ சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளான ஸ்ரீதரன், கு.பாலசுப்ரமணியம், அப்துல் மஜீத் உள்ளிட்டோர்இன்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷைச் சந்தித்து மனுகொடுத்தனர்.
அதில், 587 ஊழியர்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக பணியில் அமர்த்த முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். முதல்வரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications