கில்லாடி பெண் சாராய வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு!
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன்பு போலியான பெண்ணை ஆஜர் செய்து ஏமாற்ற முயன்றபெங்களூரைச் சேர்ந்த சாராய வியாபாரியைக் கைது செய்ய நீதிபதி கற்பகவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சாராய வியாபாரியை போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவர் கள்ளச்சாராய வியாபாரி ஆவார். இவர் மீதுபெங்களூர், சென்னை, ஆந்திரா உள்பட தென் மாநில நகரங்கள் பலவற்றில் வழக்குகள் உள்ளன.
யாரிடம் பிடிபடாமல் தப்பி வரும் ருக்மணி சென்னையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், ருக்மணியை 15நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டார்.
கில்லாடி ருக்மணி, வேறு ஒரு பெண்ணை ருக்மணி போல நீதிமன்றத்திற்கு அனுப்பி சரணடைய வைத்தார். ஆனால்ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்து விட்ட நீதிபதி கற்பகவிநாயகம், ருக்மணியை உடனடியாகக் கைது செய்யுமாறுபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கில்லாடி பெண் ருக்மணியை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications